விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் வெற்றிப்பட நாயகி

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

கடந்த ஆண்டு வெளியான 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ஷாலினி பாண்டே, அந்த படத்தின் மாபெரும் வெற்றியால் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். தற்போது ஜிவி பிரகாஷுடன் '100% காதல்' மற்றும் ஜீவாவுடன் 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வரும் ஷாலினி பாண்டே அடுத்ததாக விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'காளி' படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனி தற்போது 'திமிறு பிடிச்சவன்' மற்றும் 'கொலைகாரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து அவர் 'முடர் கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். 'மூடர் கூடம்' நவீன் தற்போது 'அலாவுதினும் அற்புத கேமிராவும்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் அவர் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் நவீன், விஜய் ஆண்டனி இணையும் இந்த படத்தில் ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் ஆரவ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். ஆரவ்வும் ஓவியாவும் காதலிப்பதாக கூறப்பட்டாலும்

'சர்கார்' படத்தின் மொத்த வாய்ப்பையும் பெற்ற பிரபலம்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பல சாதனைகள் புரிந்தது என்பது தெரிந்ததே. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்

ஆகஸ்ட் 3-ல் வெளியாகிறது ஜோதிகாவின் அடுத்த படம்

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் தமிழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தீபாவளி ரிலீசில் இருந்து விலகுகிறதா 'என்.ஜி.கே?

வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்ததால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர்.