ஷங்கர் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’எந்திரன்’ படத்தின் கதை திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென அமலாக்கத்துறை இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷங்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென அமலாக்கத்துறை ஷங்கர் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஷங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஷங்கர் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், "கதை திருட்டு விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை. அவருக்கு சம்பளமாக ₹11.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அது கதைக்காக மட்டுமல்ல, மற்ற அனைத்து பணிகளுக்காகவும் தான் கொடுக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, நீதிபதிகள், புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல், திடீரென அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 21-ஆம் தேதி ஒத்திவைத்தனர். இதனால், தற்காலிகமாக ஷங்கருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com