ஷங்கர்- ராம்சரண் தேஜா படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,September 08 2021]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது.

இன்று நடைபெறும் பூஜையில் ஷங்கர், ராம்சரண் தேஜா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், இசையமைப்பாளர் உள்பட ஒரு சில தகவல்களும் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராம்சரண் தேஜா ஜோடியாக கைரா அத்வானி நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு ’விஸ்வாம்பாரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று தொடங்கும் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களுக்கு நடைபெறும் என்றும் அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ராம் சரண் தேஜா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு ஷங்கர் திரும்புவார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் ராம் சரண் தேஜா படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

More News

கார்த்தி-அதிதி ஷங்கரின் 'விருமன்': இரண்டு நிமிட வீடியோ வைரல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடிக்கும் 'விருமன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.

அட்லி-ஷாருக்கான் படத்தில் தளபதி விஜய்யா? ஆச்சரிய தகவல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஜவான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் நாயகிகளாக நயன்தாரா

கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை?

உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் சில நாடுகள் இன்னும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

காதலியின் காதில் செக்ஸ் வைத்துக்கொண்ட காதலன்… வந்த விளைவு?

ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதத்தில்

நுகர்ந்தாலே போதும்… மதுப்பிரியர்களை குஷிபடுத்தும் புது வரவு!

மது வகைகளில் எவ்வளவோ புதுப்புது வரவுகள் வந்துவிட்டன. ஆனாலும் நீராவியை உறிஞ்சுவது போன்று மதுப்புகையை உறிஞ்சியே போதையேற்றிக் கொள்ளும்