முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த ஷங்கர்: அடுத்தது 'இந்தியன் 2' படமா?

  • IndiaGlitz, [Wednesday,November 03 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ராம் சரண் தேஜா நடிப்பில் தெலுங்கு திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே, சத்தாரா மற்றும் பால்ட்டான் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராம்சரண் ஜோடியாக கைரா அத்வானி நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி உள்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படத்தக்கது. இந்த நிலையில் ராம் சரண் தேஜா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ’இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடங்குவாரா? அல்லது ராம் சரண் தேஜா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ‘அன்னியன்’ படத்தின் ரீமேக் படத்தையும் ஷங்கர் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி மகளுக்கு ஆதரவு அளித்த முதல்வர் ஸ்டாலின்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் சமூக வலைதளமான

கலகலன்னு இருந்த பிரியங்காவை புலம்ப வைத்த பிக்பாஸ்!

பிரியங்கா எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகல என்று பேசிக் கொண்டிருந்தவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று புலம்ப வைத்துவிட்டார் பிக்பாஸ் என இன்றைய அடுத்த புரமோவில் இருந்து தெரியவருகிறது

மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலை !

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு

கம்பேக் கொடுக்கிறாரா யுவராஜ் சிங்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராகவும் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாகவும் இருந்து அதிரடி காட்டியவர் யுவராஜ் சிங்.

'அன்புசெல்வன்' படம் குறித்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் 'அன்புசெல்வன்' என்ற திரைப்படம் உருவாகுதாக இன்று காலை திரை உலக பிரபலங்கள் டுவிட்டர் பக்கங்களில் விளம்பரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.