close
Choose your channels

'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் உள்பட மூவர் பலியாகினர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடியும் லைகா நிறுவனம் ரூ.2 கோடியும் நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சற்றுமுன் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வளவு உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது என்றும், இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாகவும் ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் கொடுத்த ஒரு கோடி ரூபாயுடன் சேர்த்து இதுவரை பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.