close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' விழாவில் 'இந்தியன் 2' அப்டேட் கொடுத்த ஷங்கர்!

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ பட ம் குறித்த மாஸ் அப்டேட்டை தெரிவித்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும் மணிரத்னம் குறித்தும் பேசியதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விழாவில் அவர் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட்டை ஷங்கர் கொடுத்துள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்றும் நேற்றுடன் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் அதில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos