ரசிகர்களுக்கு ஷங்கர் படக்குழுவினர்களின் எச்சரிக்கை!

  • IndiaGlitz, [Thursday,February 17 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஓபன் வெளியில் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை இருப்பதால் படப்பிடிப்பை காண நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களையும், படப்பிடிப்பு தளத்தையும் ஒரு சிலர் மொபைல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக படக்குழுவினர்களுக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து ஷங்கரின் ’ஆர்.சி. 15’ படக்குழு ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓபன் வெளியில் நடைபெறும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு பதிவு செய்தால் அவர்களது சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராம்சரண் ஜோடியாக கைரா அத்வானி நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உறவுகள் தொடர்கதை: இசைஞானியுடன் மீண்டும் கங்கை அமரன்!

இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளதாக கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் தனுஷ்: உடனிருக்கும் இளம்பெண் யார்?

இளம்பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி தந்த அதிர்ஷ்டம்… ஒரே டிக்கெட்டில் கோடி ரூபாயை வென்ற இந்திய இளைஞர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்துவரும் இந்திய இளைஞர்

12ஆவது மாடியில் தொங்கி வொர்க் அவுட் செய்த பலே அறிவாளி…  பதற வைக்கும் வீடியோ!

சமீபத்தில் ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 10 ஆவது மாடியில் தொங்கவிட்ட

60 வயதில் திருமண நாடகம் போட்ட ஆசாமி… 14 திருமணங்களைச் செய்து மோசடி!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் திருமணத்