close
Choose your channels

இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித் தாமோதரன் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ரோகித் தாமோதரன் உள்பட 5 பேர்கள் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.