close
Choose your channels

ஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர் 

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் தங்கள் சமூக வலைதளங்களில் விபத்து குறித்தும், இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் டுவிட்டுக்களை பதிவு செய்தனர் இந்த நிலையில் விபத்து நடந்து ஒருவாரம் கழித்து இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்

அதில் ’அன்று நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீண்டு வரவில்லை. எனது உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர்களின் இழப்பை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கடந்த சில நாட்களாக தூங்கவே இல்லை. அந்த அளவுக்கு இந்த விபத்து என்னை மிகவும் பாதித்துள்ளது. இந்த விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினேன். இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் இன்னும் ஒரு சில நாட்களில் அதே இடத்தில் தொடங்க உள்ளதாகவும் படப்பிடிப்புக்கு முன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.