close
Choose your channels

கேதார் ஜாதவ் விஷயத்தில் எல்லை மீறுகிறோம்: 'மாஸ்டர்' நடிகர் டுவீட்

Friday, October 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 12 பந்துகளில் 7 ரன்கள் என ஆமை வேகத்தில் ரன் எடுத்த கேதார் ஜாதவ் தான் சென்னை தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு டுவிட்டரில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

உண்மையில் அந்த போட்டியில் வாட்சன் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடாத நிலையில் கேதர் ஜாதவ் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய்யுடன் முக்கிய கேரக்டரில் நடித்த சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் கேதர் ஜாதவ் விஷயத்தில் நாம் எல்லாம் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நாம் அனைவரும் சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ரசிகர்கள். அதனால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். கேதார் விஷயத்தில் நாம் எல்லை மீறுவது போல் நான் நினைக்கின்றேன். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் களத்தில் மோசமான நாளென்று ஒன்று அமையும். அது எனக்கு நன்றாக தெரியும். பல விஷயங்கள் அப்போது மனதில் ஓடும். அதனால் அப்போது ஆடுவது எளிதான காரியம் அல்ல.

ஆனால் கண்டிப்பாக கேதார் ஜாதவ்வும், சிஎஸ்கே அணியும் மீண்டு வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதற்காக கேதார் ஜாதவ்வை நீக்க வேண்டும் மனு போடுவதெல்லாம் மிகவும் டூ மச்.

ஒருவர் மீது அதிக வெறுப்பை காட்டவேண்டாம். ஒருவேளை அவருக்கு ஓரிரு போட்டிகளில் ஓய்வு தந்தால் அவர் மீண்டும் உத்வேகத்துடன் மீண்டும் ஃபார்முக்கு வர வாய்ப்பு உள்ளது. இது ஒரு விளையாட்டுதான். எனவே எதையும் தீவிரமாக எடுத்து கொள்ளாமல் எளிதாக எடுத்துக் கொள்வோம்’ என்று சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.