நட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே!

நடராஜனின் பந்துவீச்சை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஆஸ்திரேலியா முன்னாள் பந்துவீச்சாளர் ஷேர்வார்னேவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியின் சார்பில் நெட்பவுலராக தான் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் முதலில் ஒரு நாள் போட்டிகளிலும் அதன்பின் டி20 போட்டிகளில் அணியில் இடம்பெற்ற நிலையில் தற்போது நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் இடம் பெற்று உள்ளார் என்பதும் நடராஜன் அறிமுகமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த போட்டியில் நடராஜன் மிக அபாரமாக பந்துவீசி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 14 ஓவர்கள் 4 மெய்டன்களாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடராஜனின் பந்து வீச்சு குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஒரு புதிய சந்தேகத்தை எழுப்பி உள்ளார். நடராஜன் முதல் இன்னிங்சில் 7 நோபால்களை வீசி உள்ளதாகவும் அதில் ஐந்து நோபால்கள் ஒவ்வொரு ஓவரின் முதல் பந்தை அவர் நோபாலாக வீசியுள்ளது சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

நடராஜன் டெஸ்ட் போட்டியில் இப்போதுதான் அறிமுகமாகி இருப்பதால் பதட்டத்தில் அவர் சாதாரணமாக வீசிய நோபால்களை ஸ்பாட் பிக்சிங் போல் ஷேர்வார்னே பேசி இருப்பதற்கு கடுமையான கண்டனங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியினர் பலமுறை ஸ்பாட் பிக்சிங் செய்தது குறித்து வாய் திறக்காமல் இருந்த வார்னே, பதட்டத்தில் போட்ட நோபால் குறித்து சந்தேகத்தை எழுப்பி இருப்பது அவருடைய தரத்தை குறிப்பிடுகிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

நடராஜனை ஸ்பாட் பிக்சிங் புகாரில் சேர்க்கும் போதே வார்னே அவர்களின் தரம் என்னவென்று தெரிந்து விட்டது என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். நடராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வாங்கிக்கொள்ளும் வார்னேவால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

ஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது.

பிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்.

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்!

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.