அட்லியின் அடுத்த படத்திலும் ஹீரோவுக்கு டபுள் ஆக்சன்?

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார் இருப்பினும் ’பிகில்’ படத்தை அடுத்து ஒரு வருடமாகியும் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவுள்ள அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் போலீஸ் மற்றும் கிரிமினல் என நாயகன், வில்லன் ஆகிய இரண்டு வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கிய ’மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களிலும், ‘பிகில்’ படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஒரு டபுள் ஆக்ஷன் படம் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு உள்ளது.

More News

இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் ரேஷன் கடைகளுக்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

ஓட்டலில் ராஷ்மிகா திருடிய பொருள்: வைரலாகும் வீடியோ!

ஓட்டலில் தங்கியிருந்தபோது தான் ஒரு பொருளை திருடியதாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா? கமல் பட நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்!

உலகநாயகன் கமலஹாசன் தனது படங்களில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைப்பார் என்பது தெரிந்ததும். டால்பி, டிடிஎஸ் உள்பட பல டெக்னாலஜி அவரது திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டது

மீண்டும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் தனி விமானத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றனர்