ஒரு விஷயத்தை பத்தி தெரியாம பேசாதீங்க......! ஷில்பா ஷெட்டி ஆதங்க அறிக்கை...!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை நிலையை பற்றி அறிந்துகொள்ளாமல், தேவையில்லாமல் அரைகுறை கருத்துக்களை கூறாதீர்கள் என்று நடிகை சில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

ஆபாச படங்களை எடுத்ததற்காக, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார், இவருடன் சேர்ந்து 11 நபர்களும் கைது செய்யப்பட்டார்கள். இப்பிரச்சனை சமூகவலைத்தளங்களில் பூதாகரமாக வெடிக்க பலரும் இவர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ராஜ்குந்த்ரா மேல் ஒருசில நடிகைகள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக எங்கள் மீது, ஏராளமான குற்றச்சாட்டுக்களும், வதந்திகளும் வந்த வகையில் உள்ளது. மீடியாக்களில், ஆதராமில்லாமல் கேலி, கிண்டல்களும், தாக்குதல்களும் எங்கள் குடும்பத்தாருக்கு வருகிறது.அது குறித்து நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், தவறாக என் மீது பழி சுமத்த வேண்டிய அவசியமில்லை.ஒரு நடிகையாக நான் யாருக்கும், எந்த ஒரு புகாருக்கு விளக்கம் சொல்லக் கூடாது என்பது தான் என்னுடைய கொள்கை. தற்போது மும்பை போலீஸ் மற்றும் நீதித்துறை தகுந்த விசாரணை நடத்தி வருகிறது, அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்களால் முடிந்தவரை சட்டபூர்வமான முறையில் போராடி வருகிறோம். இதனால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, எங்களுடைய தனிப்பட்ட வாழ்விற்கு மதிப்பளியுங்கள். ஒரு விஷயத்தில் உண்மை தன்மையை ஆராயாமல், அரைகுறையான கருத்துக்களை கூற வேண்டாம்.



சென்ற 29 வருடங்களாக நான் கடினமாக உழைத்து வரும், சட்டத்தை மதிக்கும் குடிமகள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால், குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள். ஊடகங்கள் விசாரிப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் சட்டம் அதன் கடமையைச் செய்யும் சத்யமேவ ஜெயதேஎன்று பதிவிட்டுள்ளார்.

More News

விக்ரம்-துருவ் விக்ரம் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சனை: அதன்பின் என்ன ஆனது?

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துவரும் 'சியான் 60' படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்ற விமானத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தாத்தாவின் 85வது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

பிரபல தமிழ், மலையாளம், தெலுங்கு நடிகை ஒருவர் தனது தாத்தாவின் 85ஆவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

'வலிமை' சிங்கிள் பாடல் அப்டேட் செய்த யுவன்ஷங்கர் ராஜா!

தல அஜித் நடித்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரபல இயக்குனரின் தாயார் இன்று காலமானார்.....!

பிரபல பாடகியான கல்யாணி மேனன் இன்று காலை சென்னையில் காலமானார்.

சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறக்க உள்ள நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள