தான் பட்ட அவமானத்தை முதல்முறையாக கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி! 

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே ஷிவாங்கி ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் அவரை புகழின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 1ஐ விட சீசன் இரண்டில் அவர் செய்யும் நான்ஸ்டாப் காமெடி ரசிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அஸ்வினிடம் அவர் செய்யும் ரொமான்ஸ் லூட்டி, புகழிடம் அண்ணன் தங்கை காமெடி ஆகியவை ரசிக்கும்படியாக இருக்கிறது என்பதால் ஷிவாங்கிக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தான் பட்ட அவமானங்களை கண்ணீருடன் முதல் முறையாக மனம் திறந்து ஷிவாங்கி கூறியுள்ளார். பள்ளியிலிருந்து இந்த குரலை வைத்து என்னை நிறைய பேர் கலாய்த்து உள்ளார்கள். பசங்க எல்லாரும் என்னை அந்த பொண்ணு ஒரு மாதிரி பேசுமே என்றுதான் என்னைப் பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் ’இந்த நிலையில் தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நாம் நாமாக இருப்போம் என்று நினைத்து வந்தேன். இப்பொழுது என்ன எல்லாரும் அவங்க வீட்டில் உள்ள குழந்தை போலவே பார்க்கிறார்கள். எங்கேயாவது நான் வெளியே சென்றால் வயதானவர்கள் ஷிவாங்கி பிள்ளை, ஷிவாங்கி பிள்ளை என்று என் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கின்றார்கள். குக் வித் கோமாளி சீசன்2 என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கண்ணீருடன் கூறினார்.