இப்பவே இப்படி, பிக்பாஸ் வீட்டுக்கு போனால் என்ன ஆகுமோ? ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்கள்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி என்றும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த நிலையிலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதை கைவிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு கவர்ச்சி புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன்னரே கவர்ச்சி கடலில் குளித்துக் கொண்டிருக்கும் ஷிவானி, பிக்பாஸ் வீட்டுக்குள் போனவுடன் என்ன ஆகுமோ? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் ஷிவானிக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்மு, கேப்ரில்லா, சஞ்சனா சிங் உள்ளிட்டவர்கள் இருப்பதால் இந்த சீசனில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் குடும்பத்துடன் காணும் வகையில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வயது வந்தோருக்கான நிகழ்ச்சியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிபரை கோமாளி எனக் சொன்னவருக்கு நேர்ந்த கதி… கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்த சம்பவம்!!!

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை கோமாளி என விமர்சித்த அந்நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் இறந்த 87 வயது நபரின் உடலை எலி கடித்து குதறிய கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ரிக்சா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!

லண்டனில் பாலே டான்ஸ் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என ரிக்சா ஓட்டுநர் ஒருவரின் மகன் கனவை நனவாக்க பிரபல நடிகர் ஒருவர் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வெளி வந்திருக்கும்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆவணங்களை பட்டியலிட்டு ஐ.நா அவையையே தெறிக்கவிட்ட தமிழர்…

ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45 ஆவது கூட்டம் தொடங்கப்பட்டு,

'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு