close
Choose your channels

ஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்!

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் மௌனமாக இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது வாரம் முதல் ரம்யா, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகியோர்களிடம் மட்டும் கொஞ்சம் பேச ஆரம்பித்தார். இந்த நிலையில் தற்போது அவர் அனிதாவிடம் மோதலும் பாலாஜியுடன் ரொமான்ஸிலும் ஈடுபடும் அளவுக்கு தேறிவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தவர்களின் ஒருவர் ஷிவானி. அவரது தினசரி புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய குரூப் உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷிவானி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் பரபரப்பின்றி உள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஷிவானியும் அவரது தாயாரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷிவானியின் அக்கா போன்று இளமையாக இருக்கும் ஷிவானியின் தாயாரின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு ஜாலியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் ‘அத்தை மட்டும் போதும் மாமா’ என்பது. ஷிவானியின் தாயார் புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.