சினிமாவில் சான்ஸ் கிடைக்கவில்லை.. புதிய தொழிலுக்கு மாறிவிட்ட ஷிவானி நாராயணன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சீரியல் நடிகை, திரைப்பட நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் என வலம் வந்த ஷிவானி நாராயணன், தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்துள்ள நிலையில், இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
'பகல் நிலவு' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமான ஷிவானி நாராயணன், அதன் பிறகு 'சரவணன் மீனாட்சி சீசன் 3', 'ராஜா ராணி', 'கடைக்குட்டி சிங்கம்', 'ரெட்டை ரோஜா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
அதன் பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 98 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'வீட்டில் விசேஷம்', வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்', உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பு வராத நிலையில், தற்போது அவர் மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்துள்ளார்.
'லேட்டஸ்ட் டிசைன்' காஸ்ட்யூம் அணிந்து கேட்வாக் செய்த ஷிவானி வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன. இனி இதே துறையில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments