close
Choose your channels

கவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்!

Monday, January 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருந்ததால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஷிவானியிடம் ரசிகர்களும் ஃபாலோயர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்

ஆனால் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அவர் பெரும்பாலும் அமைதியாகவும், பாலாஜிக்கு ஆதரவாகவும் மட்டும் இருந்ததால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக டாஸ்க் விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது அவர் தனது டுவிட்டரில் டைட்டில் பட்டம் வென்ற ஆரிக்குக் தனது வாழ்த்துக்களை தெரிவித்து ’நீங்கள் சாதித்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது வழக்கமான, கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்து ’அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஷிவானியின் இந்த சமூக வலைதள பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.