அம்மா சத்தியமா இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. 'ஜெயிலர் 2' அனுபவம் குறித்து பிரபல நடிகர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில், அதனை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
ஜெயிலர் பாகம் ஒன்றில் சில காட்சிகளில் வந்த சிவராஜ்குமார் தனது காட்சிகளுக்கு மாஸ் வரவேற்பு கிடைத்தது து குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியபோது, “ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இருக்கிறேன். என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் “ஜெயிலர்’ முதல் பாகத்தில் நான் ஒரு சிறு பகுதி தான் வந்தேன். அம்மா சத்தியமாக சொல்கிறேன், எனக்கு அந்த படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஜஸ்ட், நான் ஒரு சிகரெட் பிடித்தவாறு அதை குப்பை தொட்டியில் போடும் காட்சிகள் தான் நடித்தேன். ஆனால் அந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிலிருந்தும் என்னுடைய நடிப்பை பாராட்டி போன் செய்தார்கள். அந்த படத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லையே. இயக்குனர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்தேன். அதுதான் ரஜினிகாந்த் மேஜிக்,” என்று கூறினார்.
அதேபோல் ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருப்பதை இன்னொரு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா உறுதி செய்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோர்களுடன் எனது சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com