பவா செல்லத்துரை எடுத்த அதிர்ச்சி முடிவு.. பிக்பாஸ் என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 09 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் முடிவடைந்து நேற்று அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான பவா செல்லத்துரை எடுத்த அதிர்ச்சி முடிவு பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இன்று கன்ஃபக்‌ஷன் அறைக்கு வந்து பிக்பாஸ் இடம் ’இனிமேல் என்னால் ஒரு நாள் கூட பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூற, அதற்கு பிக் பாஸ் சமாதானப்படுத்துகிறார்.

நான் என்ன நினைத்து இந்த வீட்டிற்கு வந்தேன் என்றால், இதுவரை ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்க்கை வாழலாம் என்று தான் இங்கு வந்தேன். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான், ஒவ்வொரு போட்டியாளரின் மனதில் ஒரு குரூரம் இருக்கிறது, அது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது என்பதை பார்த்தேன்.

இங்கே உள்ள ஒவ்வொரு நிமிஷமும் ஒருவரை ஒருவர் முதுகில் குத்துவது, குறை சொல்வது என இருந்து கொண்டிருக்கின்றனர். என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை அப்படி இருந்ததே கிடையாது. நான் ஒரு மனிதனுடைய மேன்மையை மட்டுமே பார்த்து வளர்ந்தவன், எனக்கு இங்கு பயங்கரமான அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, எனவே நான் வெளியேற விரும்புகிறேன்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து பவா செல்லத்துரையை சமாதானப்படுத்தும் பிக்பாஸ், ’கூல் சுரேஷ், பிரதீப் அந்தோணி, விஷ்ணு ஆகியோர்களை நம்பி நீங்கள் இந்த வீட்டிற்கு வரவில்லை, என்னை நம்பி வந்திருக்கிறீர்கள், தைரியமாக விளையாடுங்கள் என்று கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஒரே வாரத்தில் இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று பவா செல்லத்துரை எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பிக் பாஸ் அவரை சமாதானப்படுத்தி உள்ளார். கடந்த சீசனிலும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜிபி முத்து கூறினார் என்பது தெரிந்ததே.

More News

செம்ம ஸ்டைலில் சியான் விக்ரம்.. அடுத்த பட அறிவிப்பு எப்போது?

நடிகர் சியான் விக்ரம் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சற்றுமுன் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரிடம் அடுத்த பட அறிவிப்பு எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்  

மம்முட்டி மகன், முதலமைச்சர் கேரக்டரில் ஜீவா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி..!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'யாத்ரா' என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இஸ்ரேலில் சிக்கி கொண்ட சந்தானம் பட நடிகை.. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியாததால் பதட்டம்..!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இடையே திடீரென போர் ஏற்பட்ட நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு திரைப்பட விழா ஒன்றுக்கு சென்ற பிரபல நடிகை ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும்

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து.. அதிர்ச்சி புகைப்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இவர் திடீரென காலில் கட்டு போட்டு படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு

3 படங்களிலும் ஒரே மெசேஜ்.. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடூரம்.. பார்த்திபன் பதிவு..!

கடந்த வாரம்  சித்தார்த் நடித்து தயாரித்த 'சித்தா' மற்றும் மம்முட்டி நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்',  இந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ஆகிய  மூன்று படங்களும் பெண் குழந்தைகளுக்கு