close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிரடி நடவடிக்கைகளால் தினமும் ஒரிருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சித் தகவலாக தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 50 பேருக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 74 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சேர்த்து 124 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்ட 50 பேர்களில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 1131 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதி பேர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos