close
Choose your channels

சென்னையில் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம்: 2 பெண்கள் புகார்

Wednesday, May 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பெண்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா நகர் பாடி பகுதியில் தங்கியிருந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று ஜெஜெ நகர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு தன்னுடைய வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணும் இதேபோன்ற ஒரு புகாரை அளித்துள்ளது காவல்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் ஒருவரை பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.