கொரோனாவால் இறந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ… தொடரும் சர்ச்சை!

உத்திரப்பிரதேச மாநிலம் ராப்தி ஆற்றங்கரையில் நின்று கொண்டு இரு ஆண்கள் அதுவும் பிபிஇ உடையுடன் இறந்தவர் உடலை ஆற்றில் வீசி எறியும் வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. கடந்த மே 28 ஆம் தேதி வெளியான இந்த வீடியோ கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உ.பி மாநிலத்தின் பால்ராம்பூர் மருத்துவமனையில் கடந்த மே 25 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த மே 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். உயிரிழந்த உடலை மருத்துவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். அந்த உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் ராப்தி ஆற்றில் வீசி உள்ளனர்.

இந்தச் சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பல வடமாநிலங்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதிலும் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உயிரிழந்தவர்களை எந்த பாதுகாப்பும் இன்றி மக்கள் ஆற்றின் மணலில் புதைத்து வைப்பதும், தண்ணீரில் அப்படியே வீசுவதுமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் பக்ஸர் ஆற்றில் மட்டும் இதுவரை 71 உடல்கள் வீசப்பட்டன என்றும் பிரயாக்ரஜின் உள்ள கிராமங்களில் இதேபோன்று நூற்றுக்கணக்கான பிணங்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர கங்கை ஆற்றங்கரை ஒட்டியப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும், பல ஆயிரக்கணக்கான பிணங்கள் மணலில் புதைக்கப்பட்டு உள்ளன. இப்படி புதைக்கப்பட்ட பிணங்களின் உடல் பாகங்கள் வெளியே தெரிவதுபோன்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. அதை நாய் போன்ற விலங்குகள் சாப்பிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கங்கை ஆற்றங்கரை அருகே ரோந்து பணிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பிச்சை எடு' என்று கூறிய நெட்டிசனுக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த 'கேப்டன்' மகன்!

'பிச்சையெடுத்து பிழைக்கலாமே' என்று கூறிய நெட்டிசனுக்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாகரீகமாக பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷ்ணு விஷாலின் சகோதரியா இவர்? லைக்ஸ்கள் குவியும் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'குள்ளநரி கூட்டம்

எனது மகனை அறிமுகம் செய்கிறேன்: நடிகை வரலட்சுமியின் வீடியோ வைரல்!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் விஜய்யின் 'சர்க்கார்' தனுஷின் 'மாரி 2' விஷாலின் ண்டக்கோழி 2' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வரலட்சுமி

ஊரடங்கு நேரத்தில் ஷகிலாவின் தாராள மனம்: பொதுமக்கள் பாராட்டு

ஷகீலா என்றாலே 90களின் கிளாமர் நடிகை என்ற இமேஜ் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மாறி, தற்போது அவரை அனைவரும் ஷகிலா அம்மா என்று அழைத்து வரும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி

#GoBackStalin டூ #WeStandWithStalin ஹேஸ்டேக்...! டுவிட்டரில் ட்ரெண்டாகும் முதல்வர்...! எப்படி..?

இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொங்கு மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு  மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் கொரோனா களப்பணிகளில் ஆய்வு மேற்கொண்டார்.