சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் அவலம்… வைரல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சாலை விபத்தினால் உயிரிழந்த ஒரு சிறுமியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அந்த உடலை தெருநாய் ஒன்று கடித்து இழுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.

நேற்று சாலை விபத்தினால் உயிரிழந்த சிறுமி ஒருவரின் உடலை சாம்பல் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டெக்சரில் ஏற்றி, படிக்கட்டு ஓரமாக வைத்து உள்ளனர். இந்த உடல் அருகே எந்த ஊழியர்களும் இல்லாத காரணத்தால் தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் தற்போது எழுப்பி இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இவ்வளவு அலட்சியாக நடந்து கொள்வார்களா என அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் இணையத்தில் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். பல சமூக நல ஆர்வலர்களும் இதே போன்ற கேள்விகளையே தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி பெற்றோர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.