இந்திய அணியில் பெட்டிக் கடைக்காரர் மகன்… தந்தையே பயிற்சி கொடுத்து அரிய சாதனை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 14 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மகனும் இடம்பெற்றுள்ளார். இதிலென்ன அதிசயம்? என்று கேட்கலாம்… ஆனால் தன்னுடைய மகனின் வளர்ச்சிக்காக அந்தப் பெட்டிக்கடைக்காரர் செய்த தியாகம்தான் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த கோட்கான் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் ஸ்ரவன் யாதவ். இவர் தன்னுடைய மகன் சித்தார்த் யாதவிற்கு கிரிக்கெட் விளையாட்டின்மீது அதிக ஆர்வம் இருப்பதை அவரது 8 வயதிலேயே தெரிந்து கொண்டார். இதையடுத்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்துவரும் இவர் பயிற்சியாளர் யாரையும் நியமிக்காமல் தினமும் தன்னுடைய மகனுக்காக கடையை மூடிவிட்டு கிரிக்கெட் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உற்றார் உறவினர்கள் கூட ஸ்வரன் யாதவை எச்சரித்து இருக்கின்றனர். ஆனால் மகனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம், பெரிய வசதியில்லை. எனவே தினமும் மதிய வேளையில் 4 மணிநேரம் கடையை மூடிவிட்டு கிரிக்கெட் களத்திற்கு கிளம்பிய ஸ்வரன் யாதவ் தன்னுடைய மகனுக்கு அசராமல் பயிற்சி கொடுத்திருக்கிறார். இதனால் பள்ளி, கல்லூரி காலத்தில் சித்தார்த் பல்வேறு போட்டிகளில் ஜொலித்திருக்கிறார்.

இதையடுத்து 16 வயதுக்குட் பட்டோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சித்தார்த் யாதவ் 2 சதம் மற்றும் 5 சதங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனால் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் அதுவும் உலகக்கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

19 வீரர்கள் அடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த சித்தார்த் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கத. இதையடுத்து சித்தார்த்தின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த அவருடைய தந்தை ஸ்வரன் யாதவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

கொரோனா வைரஸால் விந்தணு சிக்கல்…. 2 மாதம் கழித்தும் நீளுவதாக தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட ஆண்களுக்கு 2 மாதம் கழித்தும் கூட அவர்களின் விந்தணு இயக்கம்

பிறப்புறுப்பில் 278 ஓட்டை… பதற வைக்கும் கின்னஸ் சாதனை மனிதன்!

உடலில் துளைகள்போட்டு அதில் ஆபரணம் அணிந்து கொண்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரு மனிதன் தன்னுடைய அந்தரங்க உறுப்பிலும் 278 துளைகளை

பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென வந்த நிரூப்பின் முன்னாள் காதலி: திடீர் திருப்பம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம்

மனைவி வருகையை பார்த்தவுடன் ராஜூவின் ரியாக்சன்: செம சாங் செலக்சன் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், மிகவும் நெகிழ்ச்சியான இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு

வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே, மேலும் நேற்று இந்த படத்தின் வெற்றி விழாவில்