close
Choose your channels

14 வயதில் நடந்த அந்த சம்பவம்: நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த ஷ்ராதா ஸ்ரீநாத்

Sunday, May 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ராதா ஸ்ரீநாத். இவர் தனது 14 வயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு 14 வயதாக இருக்கும் போது குடும்ப பூஜை ஒன்று நடந்தது. அந்த பூஜையில் நான் கலந்து கொண்ட போது திடீரென எனக்கு மாதவிடாய் வந்தது. அந்த நேரத்தில் எனது அம்மாவும் அருகில் இல்லாததால் நான் மிகவும் அசெளகரியமாக இருப்பதை உணர்ந்தேன். உடனே எனக்கு அருகில் இருந்த எனது அத்தையிடம் இது குறித்து கூறினேன். என்னிடம் சானிட்டரி பேட் கூட இல்லை என்று கவலையோடு நான் கூறியபோது, எனது அருகில் உட்கார்ந்திருந்த நல்ல மனம் கொண்ட பெண் ஒருவர் பூஜை நேரத்தில் மாதவிடாய் வந்ததற்காக கவலைப்படாதே, கடவுள் உன்னை மன்னிப்பார் என்றும் கூறியது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அப்பொழுது முதல் நான் பெண்ணியவாதியாக மாறிவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்

ஷ்ராதா ஸ்ரீநாத்தின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை ஷ்ராதா ஸ்ரீநாத் தற்போது விஷால் நடித்து வரும் ’சக்ரா’ என்ற தமிழ் படத்திலும் ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.