14 வயதில் நடந்த அந்த சம்பவம்: நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த ஷ்ராதா ஸ்ரீநாத்

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ராதா ஸ்ரீநாத். இவர் தனது 14 வயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு 14 வயதாக இருக்கும் போது குடும்ப பூஜை ஒன்று நடந்தது. அந்த பூஜையில் நான் கலந்து கொண்ட போது திடீரென எனக்கு மாதவிடாய் வந்தது. அந்த நேரத்தில் எனது அம்மாவும் அருகில் இல்லாததால் நான் மிகவும் அசெளகரியமாக இருப்பதை உணர்ந்தேன். உடனே எனக்கு அருகில் இருந்த எனது அத்தையிடம் இது குறித்து கூறினேன். என்னிடம் சானிட்டரி பேட் கூட இல்லை என்று கவலையோடு நான் கூறியபோது, எனது அருகில் உட்கார்ந்திருந்த நல்ல மனம் கொண்ட பெண் ஒருவர் பூஜை நேரத்தில் மாதவிடாய் வந்ததற்காக கவலைப்படாதே, கடவுள் உன்னை மன்னிப்பார் என்றும் கூறியது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அப்பொழுது முதல் நான் பெண்ணியவாதியாக மாறிவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்

ஷ்ராதா ஸ்ரீநாத்தின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை ஷ்ராதா ஸ்ரீநாத் தற்போது விஷால் நடித்து வரும் ’சக்ரா’ என்ற தமிழ் படத்திலும் ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

போக்குவரத்து தொடக்கம், இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்பு

ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் நிலையில் இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

கொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவை

உலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...

வரலாற்றில் நிகழ்ந்த 100 வருடப் போரைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். பிரான்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் கடுமையான வாரிசு போரை நடத்தியது.

சூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்!!!

கடந்த சில நாட்களாக வெட்டுகிளிகளின் படையெடுப்பை குறித்து நம் மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா??? தொடரும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே கறுப்பினத்தவர்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.