திருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா? கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை!

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

திருமணத்திற்குப் பின்னர் அனைத்து மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதில்லை என்றும் அப்படியே நடித்தாலும் நாயகியாக நடிக்க முடியவில்லை என்றும் திருமணத்திற்குப் பின் நாங்கள் நாயகிகளாக நடிக்க கூடாதா? என்று அஜித் பட நாயகி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷராதா ஸ்ரீநாத். இவர் தற்போது விஷாலின் ‘சக்ரா’, ‘மாதவன் நடித்து வரும் ‘மாறா’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷராதா ஸ்ரீநாத் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஒரு நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பின் சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா? பெரிய நட்சத்திரங்கள் மட்டுமல்ல சாதாரண சிறு நடிகைகளின் பதிலையும் எதிர்பார்க்கிறேன். இது குறித்து விவாதம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தோழி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் திருமணத்துக்கு பின் நான் நடிக்கலாமா? என தன்னிடம் கேட்டதாகவும் ஒரு நடிகையிடம் இருந்து இப்படி கேள்வி எழுந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார். ஒரு நடிகர் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் போது, நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்க கூடாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஷராதா ஸ்ரீநாத்தின் இந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.

More News

இந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள அனைவரும் கே பாலசந்தர்

நாய்க்கறிக்கு தடை விதித்த மாநில அரசு!!! போர்க்கொடி தூக்கிய மக்கள்!!!

நாகலாந்தில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில இறைச்சி விற்பனையில் நாய்களின் இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு சம்பவம்!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வீடு திரும்பியதும் உயிரிழந்து உள்ளார்.

ஒரே ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா: நீலகிரியில் பரபரப்பு

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது அங்கு ஒரே ஒருவரால் 100 பேருக்கு கொரோனா பரவியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பாதித்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டைவிட்டு துரத்திய கணவன்: பெரும் பரபரப்பு

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டை வெட்டிய கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது