close
Choose your channels

லண்டன் போலீசில் சிக்கிய ரஜினி-தனுஷ் பட நாயகி!

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா, லண்டன் போலீஸ் வலையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை ஸ்ரேயா தற்போது விமல் நாயகனாக நடித்து வரும் ’சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென ஸ்ரேயா, பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை தாண்டினார்.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்துகொண்டு குடியுரிமை பகுதியை எப்படி தாண்டலாம்? என விசாரணை நடத்தினர். இதனை அறிந்த படக்குழுவினர் லண்டன் போலீஸாரிடம் படப்பிடிப்பிற்கு வாங்கிய அனுமதி குறித்த ஆவணங்களை காண்பித்து நாங்கள் படத்திற்காக வந்துள்ளோம் என்றும் ஸ்ரேயா தெரியாமல் அந்த பகுதியை தாண்டி விட்டதாகவும் கூறினார். இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் விசாரணைக்கு பின்னரே ஸ்ரேயாவை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் படக்குழுவினர்கள் இடையே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.