சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதில் சந்தோஷம்: அப்பா-அம்மா விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன்!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழும் போதுதான் சந்தோசமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை சரிகா ஆகிய இருவரும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஸ்ருதிஹாசன், அக்ஷர ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பெற்றோர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சி என்றும் இருவரும் இணைந்து வாழ முடியாத நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ்வது தேவையற்றது என்றும் எனவே இருவரும் சரியான முடிவை எடுத்து தற்போது தனித்தனியாக சந்தோசமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது கிடைத்த சந்தோசமான வாழ்க்கையை விட பிரிந்து வாழும்போது சந்தோசமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சந்தோசத்தை பார்த்துதான் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் பெற்றோர்களாக இருவரும் தொடர்ந்து எங்கள் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பாக தந்தை தனக்கு மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவருமே தனித்தனியாக மிகவும் அற்புதமானவர்கள் என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்: சமந்தா தெரிவித்த விருப்பம்!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை போலவே நீங்களும் நடந்துக்கோங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கருப்பு பூஞ்சை நோய் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்று குறித்த பீதி ஏற்பட்டு உள்ளது.

வட்டி கேட்டதால், கொலை செய்த கடன்காரன்...! கோவையில் பயங்கரம்...!

கடன் கொடுத்துவிட்டு, வட்டிக்கேட்ட பெண்ணை கொலை செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த வீராச்சாமி என்ற கொடூரன். இச்சம்பவம் பெரும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தை அழிக்க வந்த கொடூர வில்லன்கள் வைரஸ்? என்ன காரணம்?

உயிரினத்தை தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள்தான் இந்த பாக்டீரியாவும், வைரஸ்ஸும்.