ரஜினியின் 'கூலி', கமல்ஹாசனின் 'தக்லைஃப்'.. ஸ்ருதிஹாசன் சொன்ன முக்கிய தகவல்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தக்லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ருதிஹாசன் சென்னை வந்துள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த போது, ரஜினியின் ‘கூலி’, கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ குறித்த முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள ‘தக்லைஃப்’ படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தில் "விண்வெளி நாயகனே" என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இந்த பாடலை பாடும் வாய்ப்பை வழங்கிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி என்றும், விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது அவர் தெரிவித்தார்.
மேலும், கூலி படத்தில் ரஜினியுடன் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்றும், “அந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றும் கூறினார். தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், “என் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அனைவரும் ரசிப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அப்பா படத்தில் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படம் வெளியானதும் ரசிகர்களுடன் சேர்ந்து நானும் படம் பார்ப்பேன்” என்றும் கூறினார். “அப்பா கூப்பிட்டால் எப்போது வேண்டுமானாலும் அவருடன் இணைந்து நடிக்க தயார்” என்றும் தெரிவித்தார்.
அதோடு, விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com