close
Choose your channels

கணவர் இறந்த மறுநாளே முக்கிய வேண்டுகோள் விடுத்த ஸ்ருதி சண்முகபிரியா..!

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் இன்று நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கணவர் மறைவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தனது கணவர் மரணம் குறித்து பல யூடியூப் சேனல்களிலும் நியூஸ் சேனல்களிலும் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் நாங்கள் அவருடைய மறைவால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் நிலையில் இந்த செய்திகள் தங்களை மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கணவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது இறந்துவிட்டார் என்பது உட்பட பல தவறான தகவல்கள் யூடியூப் சேனல்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவர் ஒரு சிவில் இன்ஜினியர், ஆனால் அதே நேரத்தில் அவர் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் விருப்பமுள்ளவர். ஆனால் அவர் இறந்தது மாரடைப்பு காரணமாக தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

எனவே தனது கணவர் மரணம் குறித்து தயவு செய்து சர்ச்சைக்குரிய தேவையில்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே எனது கணவர் இறந்த பெரும் வருத்தத்தில் நாங்கள் இருக்கிறோம், அதிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவது என்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த நிலையில் மேலும் எங்கள் மனதை புண்படும் வகையில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.