லண்டனில் வாள்வீச்சு பயிற்சி பெரும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

இந்தியாவின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் துணிச்சலாக பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 'பாகுபலி' படத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பட்ஜெட்டில் தயாராகவுள்ள சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் வீரமுள்ள இளவரசி கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். போர்க்காட்சிகளில் வாள்சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க தற்போது ஸ்ருதிஹாசன் லண்டனில் வாள்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று கூறியுள்ளனர்.
ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். சாபுபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படத்தில் சிலம்புச்சண்டை தத்ரூபமாக வருவதற்காக கடந்த பத்து மாதங்களாக சிலம்பாட்டம் பயிற்சியில் நடிகை சமந்தா ஈடுபட்டிருந்தார் என்பதை பார்த்தோம். ஹீரோக்களை போலவே ஹீரோயின்களும் டூப் இன்றி சண்டைக்காட்சிகளில் நடிக்க பெரும் முயற்சி எடுத்து வருவது கோலிவுட்டின் ஆரோக்கியத்தையே காட்டுகிறது.

More News

குஜராத் சாலையில் பாகிஸ்தான் கொடி. போலீசார் விசாரணை

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு இந்திய ராணுவர்களை கொலை செய்ததோடு அவர்களின் உடல்களையும் சிதைத்த கொடூரமான சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...

'என்றென்றும் புன்னகையுடன் த்ரிஷா. பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகை ஐந்து முதல் பத்து படங்களுக்கு நாயகியாக தாக்கு பிடிப்பதே பெரிய விஷயம் இந்த நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வருவதோடு, இன்றைய முன்னணி நாயகிகளுக்கு இணையாக கைவசம் படங்கள் வைத்திருக்கும் பிசியான நடிகை த்ரிஷா.

தற்கொலை செய்து கொள்ள தயார்! 'வாணி ராணி' நடிகை சபிதா சபதம்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' தொடரில் நடித்த நடிகை சபீதா, அந்த தொடரின் மேலாளருடன் நடுரோட்டில் சண்டை போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நடிகை சபீதா, மேலாளருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக பல இணையதளங்களும், சமூக இணையதளங்களும் செய்தி வெளியிட்டன...

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் 'தெறி' நடிகை

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டதை நெருங்கிவிட்டது. இந்த நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸை கவுதம் மேனன் வெளியிடவில்லை...

கமல்ஹாசனின் தமிழ் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார்?

உலக நாயகன் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தை நடத்தவுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...