நாளை 'படைத்தலைவன்' ரிலீஸ்.. இன்று திடீரென மன்னிப்பு கேட்ட சண்முக பாண்டியன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ என்ற திரைப்படம் நாளை அதாவது மே 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
சண்முக பாண்டியன் நடிப்பில் அன்பு இயக்கத்தில் உருவான ‘படைத்தலைவன்’ என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாக இருந்த நிலையில் தற்போது சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘படைத்தலைவன்’ திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், ‘படைத்தலைவன்’ திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்கள் காரணமாக வெளியீட்டு தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments