close
Choose your channels

கேப்டன் விஜயகாந்த் மகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Thursday, June 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் இதுவரை 'சகாப்தம்' மற்றும் 'மதுர வீரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வந்த 'தமிழன் என்று சொல்' என்ற படம் பாதியிலேயே நிற்கின்றது.

இந்த நிலையில் சண்முகப்பாண்டியனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பூபாலன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்', 'வேதாளம்', மற்றும் 'விவேகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக ரோனிகா சிங் என்ற நடிகை நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் வம்சிகிருஷ்ணா நடிக்கவுள்ளார். அருண்ராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos