close
Choose your channels

'அர்ஜூன் ரெட்டி' நடிகை கொடுத்த புகார்: பிரபல ஒளிப்பதிவாளர் கைது

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் ’ஆதித்யா வர்மா’என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் ஆனது என்பதும் இந்த படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சுதா ரெட்டி என்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு என்பவர் மீது எஸ்ஆர் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் ஷ்யாம் கே நாயுடு அவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன்பின் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் அதுமட்டுமின்றி தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஷ்யாம் கே.நாயுடுவை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை சுதா ரெட்டியின் புகார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.ரெட்டியின் கைது தெலுங்கு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.