சிபிராஜின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன சிபிராஜ், அதன்பின்னர் 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அசோக்செல்வன், ஜனனி ஐயர் நடித்த 'தெகிடி' படத்தை இயக்கிய ரமேஷ், சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சிபிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சமீபகாலமாக வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், இயக்குனர் ரமேஷ் கூறிய ஒன்லைன் கதை பிடித்துவிட்டதால் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களுடன் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

பாவனா தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கலா?

பிரபல நடிகை பாவனா கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவரை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது

அடக்கி வாசிக்க நினைத்தேன். ஆனால் பேச வைக்கின்றார்கள். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நிகழ்வுகள் குறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்கலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

புதிய தமிழக அரசுக்கு சத்யராஜ் வைத்த முக்கிய கோரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி செய்து வருகிறது.

சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமண ரத்து செய்தி?

பிரபல நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே....

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு. திமுகவுக்கு ஏமாற்றம்

கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்...