close
Choose your channels

உதட்டு முத்தக் காட்சியில் சிபிராஜ் நடிக்க மறுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

Wednesday, May 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் அனுமதி பெற்று 'சத்யா' டைட்டிலை பெற்ற படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும், போலீஸ் அதிகாரி கேரக்டரில் வரலட்சுமியும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கதைப்படி ஒரு முக்கிய காட்சியில் சிபிராஜ் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காட்சி குறித்து இயக்குனர் பிரதீப், சிபிராஜிடம் விளக்கியபோது அவர் இந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். கதைப்படி இந்த காட்சி முக்கியம் என்று இயக்குனர் எவ்வளவோ எடுத்து கூறியும் பிடிவாதமாக சிபிராஜ் நடிக்க மறுத்துவிட்டதாக இயக்குனர் பிரதீப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த உதட்டு முதக் காட்சியில் அவர் நடிக்க மறுத்ததற்கான காரணம் சிபிராஜ் மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால் தான் என்பது தெரியவந்துள்ளது.

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாம். விறுவிறுப்புடன் த்ரில் காட்சிகளுடன் இந்த படம் உருவாகியிருப்பதாகவும் நிச்சயம் இதுவொரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் பிரதீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஆனந்த்ராஜ், ரவிவர்மா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு '555' பட புகழ் சைமன் இசையமைத்து வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.