ரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ!

ஒரே நேரத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை அஜித்-விஜய் படங்களில் நடிப்பதும், கமல்-ரஜினி படங்களில் நடிப்பதும் தலைப்புச் செய்தியாக இடம் பெறும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்திலும் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகள் அல்லது தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் கமல் படங்களில் நடிக்கும் பிரபல ஹீரோ என்ற பெருமை சித்தார்த்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் 'லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, ஸ்ட்ரெயிட்டா என்கிட்ட வச்சுக்காதே' என ரஜினி பேசும் வசனம் ஒன்று வரும்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா ? தொடரும் விவாதம்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப் பட்டு வருகிறது.

நடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்றும் அந்தத் தேர்தலுக்கு பதிலாக புதிய தேர்தல் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும்

ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா? பரபரப்பு தகவல்!

உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்' என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி  மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது