முதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்!

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இளமை பொங்கி வழியும் என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய படமாக இருந்தது

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தில்தான் சித்தார்த் மற்றும் ஜெனிலியா அறிமுகம் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை. இதன் பின்னர் இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்கள் என்பதும் அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’ என்பதும், இந்த படம் பின்னாளில் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் இதிலும் ஜெனிலியா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பொம்மரிலு’ திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து சித்தார்த் மற்றும் ஜெனிலியா வீடியோ காலில் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இது குறித்த வீடியோவை ஜெனிலியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியில் ‘பொம்மரிலு’ படத்தில் இடம்பெற்ற பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

செல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 

கரூர் அருகே சார்ஜில் இருந்த செல்போன் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்

ஒரே வீட்டில் 3 பெண்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்தது 4-5 நாட்களில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!

கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.