புதிய டிவி சீரியலில் இணையும் நிஜ தம்பதிகள்.. ரசிகர்கள் வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீரியலில் ஜோடியாக நடித்து அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மீண்டும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜீ டிவியில் ஒளிபரப்பான ’திருமணம்’ என்ற சீரியலில் சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் சில சீரியல்களில் தனித்தனியாக நடித்து வந்த நிலையில் தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த சீரியல் குறித்த முழு விவரங்களை ஜீ டிவி விரைவில் வெளியிடும் என்றும் அடுத்த மாதம் முதல் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செப்டம்பர் இறுதியில் இந்த சீரியல் ஒளிபரப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com