close
Choose your channels

'ஈஸ்வரன்' படத்தின் அடுத்தகட்ட பணியையும் முடித்த சிம்பு!

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிய நிலையில் சிம்பு தனது பகுதியின் டப்பிங் பணியை ஆரம்பித்தார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிம்பு தனது பகுதியின் டப்பிங் பணியை முழுமையாக முடித்து விட்டார் என்றும் இதனை அடுத்தே நாயகி நிதி அகர்வால் உள்பட மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

'ஈஸ்வரன்’ படத்தின் டீசரை தீபாவளி அன்றும், படத்தை பொங்கல் அன்றும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்டமாக இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் எஸ்.தமன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.