மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,September 16 2017]

இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த பல தகவல்கள் ஏற்கனவே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன்படி இந்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி மற்றும் பகத் பாசில் ஆகிய  நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். அதேபோல் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

மணிரத்னம் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கின்றனர். மெட்ராஸ் டாக்கீச் நிறுவனத்தின் 17வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய நட்சத்திர கூட்டத்துடன் களமிறங்கும் மணிரத்னம் குழுவினர்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

ஹாசினியை கொடூர கொலை செய்தவருக்கு ஜாமீனா? தந்தை வேதனை

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மைனர் உள்பட அனைவருக்கும் தண்டனை கிடைத்தது. இதனால் நாட்டில் நீதி இன்னும் செத்துவிடவில்லை என்றே அனைவரும் நம்பியிருந்தனர்.

தமிழிசை செளந்தரராஜனுக்கு புதிய பதவி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக  நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது

உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி

பாப் இசையுலகில் கொடிகட்டி பறக்கும் உலகப்புகழ் பெற்ற பாடகி லேடிகாகா கடுமையான உடல்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் நலன்குமாரசாமிக்கு நிச்சயதார்த்தம்: நவம்பரில் திருமணம்

விஜய்சேதுபதி, சஞ்சிதா நடித்த 'சூது கவ்வும்' படத்தின் மூலம் இயக்குனர் ஆன நலன்குமாரசாமிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தரராஜன் இயக்கி வரும் திரைப்படம் 'டிக் டிக் டிக்' திரைப்படம் என்று கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது,.