close
Choose your channels

அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கனும்ன்னு நினைக்கிறாங்க: 'மாநாடு' டிரைலர்

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலமைச்சரை கொலை செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சிம்பு அவரை காப்பாற்ற முயற்சிக்கும் கதைதான் ‘மாநாடு’ என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

முதலமைச்சராக நடித்திருக்கும் எஸ்ஏ சந்திரசேகர் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென சுட்டுக் கொல்லப்படுகிறார். அவர் சுட்டுக் கொல்லப்படுவார் என்பதை ஏற்கனவே தனது அபூர்வ சக்தி மூலம் தெரிந்துகொண்ட சிம்பு அவரை காப்பாற்றுவதற்காக முயற்சிப்பதும், பின்னர் அவரே போலீசிடம் மாட்டிக் கொள்வதும், பின்னர் முதலமைச்சரை காப்பாற்ற தனி ஆளாய் கிளம்புவதும் தான் ‘மாநாடு’ படத்தின் கதை என்று இந்த டிரைலரில் இது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

சிம்புவின் விறுவிறுப்பான ஆக்சன், காவல்துறை அதிகாரியாக நடித்து இருக்கும் எஸ்ஜே சூர்யாவின் வழக்கமான அசத்தல் நடிப்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பு ஆகியவை இந்த படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கனும்ன்னு நினைக்கிறாங்க’ என்ற கல்யாணி பிரியதர்ஷனின் வசனம் டிரைலரின் ஹைலைட்.

மேலும் இந்த படத்தின் இன்னொரு நாயகன் என்று யுவன்சங்கர் ராஜாவை சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் பின்னணி இசையையும் பாடல்களையும் அசத்தியுள்ளார். ஒய்ஜி மகேந்திரன், எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், உள்ளிட்ட ஒரு பெரும் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ‘மாநாடு’ திரைப்படம் ஒரு வழக்கமான அரசியல் படமாக இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும் சிம்புவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.