மீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

நடிகர் சிம்பு தனது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதும், அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் ஒருசில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென சிம்பு சமூக வலைத்தளத்தில் இருந்து தற்போதைக்கு விலகுவதாக அறிவித்தார். எனினும் தன்னுடைய டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்புவதாகவும் கூறியிருந்தார். அதேபோல் அந்த டுவிட்டர் பக்கத்தில் அவரது ஒருசில அறிக்கைகளும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு அவர் நேரடியாக வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி காலை 9.09 மணி முதல் சிம்பு நேரடியாக சமூக வலைத்தளத்தில் மீண்டும் களமிறங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, அவரது படங்கள் குறித்த தகவல்கள் அந்த பக்கத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கலாம்

More News

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்!!!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை எற்படுத்தி வந்தது.

வேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாம் புரமோவில் அரக்கர்களும் ராஜ வம்சத்தினர்களும் மோதும் காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

உதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்!!!

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பாஜகவில்… நடிகர் வடிவேலு????

வைகை புயல் வடிவேலு தேசிய கட்சியான பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது

திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்!

திருமணமான 3 மாதத்தில் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது