close
Choose your channels

வாக்களிக்க வந்த சிம்புவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு!

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இன்று காலை 7 மணி முதல் வாக்களித்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஏற்கனவே வாக்களித்த நிலையில் சற்று முன் சென்னை தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சிம்பு வந்தார்

சிம்பு வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் வாக்குச்சாவடி முழுவதும் சுற்றிக் கொண்டு அவரை பார்க்கவும், அவருடன் செல்பி எடுக்கவும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தி நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடிகர் சிம்பு தனது வாக்கை பதிவு செய்தார்

கூலிங்கிளாஸ் கண்ணாடி மற்றும் மாஸ்க் என கலக்கலாக வந்த சிம்பு உடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள முண்டியடித்ததை அடுத்து அங்கிருந்த காவல்துறையினர் சிம்புவை பத்திரமாக ஓட்டு போட்ட உடன் அனுப்பி வைத்தனர். சிம்பு வாக்களிக்க வந்ததன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.