அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு: எப்போது ரிலீஸ்?

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறைவாகவே ரிலீஸ் ஆனாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒவ்வொரு படமும் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அது மட்டுமின்றி ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்க உள்ளன என்பதும் எனவே இந்த ஆண்டே சிம்புவின் மேலும் மூன்று படங்கள் ரிலீஸாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு ஏற்கனவே நடித்து முடித்த திரைப்படம் ’மஹா’. ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தை ஜமீல் என்பவர் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகிய இந்த படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்பின் அவர் கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் கிட்டத்தட்ட நாயகன் போல் இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியை சிம்பு சமீபத்தில் முடித்துள்ளார் என்றும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!

பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு . 

மாப்பிள்ளை யார்? திருமணம் குறித்து மனம் திறந்த விஜே ஜாக்லின்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்லின் தற்போது 'தேன்மொழி' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்

பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே.