25 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை 'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு பரிசளித்த சிம்பு!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் சிம்புவின் திரையுலக வரலாற்றில் 40 நாட்களில் ஒரு படம் முடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு பரிசளித்து நடிகர் சிலம்பரசன் மகிழ்வித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார். மேலும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்

More News

நானும் அமெரிக்க அதிபராவேன்: கமலா ஹாரீஸ் பேத்தியின் மழலை வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோபைடன் அவர்கள் கிட்டத்தட்ட

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: முதல்முறையாக இந்திய திரைப்படத்தில் பாடிய சங்கீத மேதை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

ஒரே திரையில் தமிழ், தெலுங்கு பிக்பாஸ்: கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்!

மக்களின் பேராதரவுடன் தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தெலுங்கு பிக்பாஸ் ஆரம்பித்து விட்டது

டிவி பார்ப்பது ஒரு குத்தமா… தனது தந்தையையே சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவவீரர்!!!

ரவில் டிவியை அணைக்க மறுத்தற்காகத் தனது தந்தையையே ஒரு முன்னாள் இராணுவவீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டிலில் வந்து ஜனநாயகக் கடமை ஆற்றிய 100 வயது முதியவர்… பீகார் தேர்தலில் நிலவும் பரபரப்பு!!!

பீகார் சட்டசபைக்கான இறுதிகட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிஹார் வாக்குச்சவாடியில் 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கட்டிலில் படுத்த படியே தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார்.