தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்: ஊடகங்களுக்கு சிம்பு வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இழந்த தன்னுடைய புகழை மீண்டும் மீட்க அவர் 'கெட்டவன்' படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், 'பில்லா 3' படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் 'தயவுசெய்து எனது அடுத்த படம் குறித்த ஊகங்களை நிறுத்தி கொள்ளுங்கள். என்னுடைய அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கெட்டவன்' மற்றும் 'பில்லா 3' ஆகிய இரண்டு படங்களுமே சிம்புவின் மனதில் இருந்தாலும் இவற்றில் எதை முதலில் தேர்வு செய்வது என்பது குறித்து சிம்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் அவருடைய படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

நமிதாவின் 'பாதி உண்மை'யில் முழு உண்மை இருக்கின்றதா?

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நமீதா தற்போதுதான் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்...

நேற்று ராஜினாமா: இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்பு

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை பார்த்தோம்...

ஆரவ்வை தொவைச்சு காயப் போட்ருவேன்: ஜூலியின் ஆத்திரம் ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக கிட்டத்தட்ட செயல்பட்டு வரும் ஜூலி, யாரையாவது குற்றம் சொல்லி கொண்டிருப்பதையே பிழைப்பாக கொண்டு வருகிறார்...

ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும்: ஓவியா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே ஓவியாவுக்கு மவுசு அதிகரித்து கொண்டே வருகிறது...

ஊழல் அரசியல்வாதிகளுக்கு கமல்ஹாசனின் தைரியமான விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பரபரப்புடன் கூறி வருகிறார்...