close
Choose your channels

'பத்து தல' படத்தின் முக்கிய அப்டேட் தந்த சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் அடுத்த திரைப்படமான ’பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட்டை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வந்த ’பத்து தல’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் கடந்த சில நாட்களாக இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் சிம்பு உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இது குறித்த புகைப்படங்களை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’பத்து தல’ படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும், இந்த படக்குழுவினருடன் பணிபுரிந்து தனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

’பத்து தல’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.